உன் பார்வையில்
எத்தனை ஆழமடி
உன் இரு விழி உரசலில்
ஊசலாடி போனதே
என் உயிர்...
என் உயிரோடு
உன் உயிர்
சில்மிஷம் செய்கையில்
வலிக்கின்றதடி என் இதயம்...
கனவென நினைத்து
உதறித் தள்ளிய காலங்கள்
நிஜமென வந்து செல்கையில்
காணாமல் போகின்றது
என் மென்மை...
என் கோபங்களை இடியென தாங்கி
என்னை சிற்பமென செதுக்குகின்றதே
உன் பொறுமை......
இசையில் கரைந்திடும் கானக் குயிலே
கண்கள் மூடி நடக்கின்றேன்
முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில்
உனதன்பை பூவென
என் வாழியெங்கும் தூவி....
உன் உயிரினில் - என்
வலிகளை தாங்கிடும் என்னுயிரே
என்ன செய்வேன் உனக்கு
நான் என் உயிரைத் தருவதைத்
தவிர...
இன்னொரு ஜென்மத்தில்
நம்பிக்கையில்லை எனக்கு
இன்னொரு பிறவி இருந்து விட்டால்
உனக்கே குழந்தையாகும் வரம்
கிடைத்திட வேண்டிடுவேன் இறைவனை...
Wednesday, February 13, 2008
இன்னொரு ஜென்மம்
Subscribe to:
Post Comments (Atom)
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள் நன்றி இனியவள்
No comments:
Post a Comment