Thursday, February 14, 2008

என்னுயிரே


நேரம் பார்த்து வானம் நோக்கி
பூவிவள் தென்றலுனை
எதிர்பார்த்துக் காத்திருக்கையில்
நிலவென ஒளி வீசி
நட்சத்திரமென கண்சிமிட்டி
முகிலினில் துயில் கொள்ள
விளைகின்றாய் ஆருயிரே...!

இதழோர புன்னகை
குறு குறு பார்வை
படபடக்கும் உன் இதயம்
இவற்றுக்கு முன்னால்
பறந்து தான் போகின்றேன்
பட்டாம் பூச்சியென...

உன் இமைகள் உரசி
பூவென விரிந்து போனதடி
என் இதயம்...

காலம் கரைந்தது தெரியாமல்
சிலிர்த்துத் தான் போகின்றேன்
உன் புன்சிரிப்பினில்....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.