நேரம் பார்த்து வானம் நோக்கி
பூவிவள் தென்றலுனை
எதிர்பார்த்துக் காத்திருக்கையில்
நிலவென ஒளி வீசி
நட்சத்திரமென கண்சிமிட்டி
முகிலினில் துயில் கொள்ள
விளைகின்றாய் ஆருயிரே...!
இதழோர புன்னகை
குறு குறு பார்வை
படபடக்கும் உன் இதயம்
இவற்றுக்கு முன்னால்
பறந்து தான் போகின்றேன்
பட்டாம் பூச்சியென...
உன் இமைகள் உரசி
பூவென விரிந்து போனதடி
என் இதயம்...
காலம் கரைந்தது தெரியாமல்
சிலிர்த்துத் தான் போகின்றேன்
உன் புன்சிரிப்பினில்....
No comments:
Post a Comment