Tuesday, October 23, 2007

!! அந்நியன் !!

இனியவள்


உன் சிந்தனை வட்டம்
எனக்குள்ளே 
சுற்றிச் சுற்றி வர
என் வாழ்க்கையின் 
வட்டம் பல்கிப் பெருகியது 
உன்னால்..!

ஓற்றைத் திங்கள் 
நிலவொளியில்
துள்ளி விளையாடும் 
முயல் குட்டியாய்
ஆனந்தக் கூக்குரலிட்ட - உன்
குரலோசையில் - என்
யன்னல் திறக்கையில்
முகத்தில் அடிக்கும்
தென்றலாய் 
உன் காட்சி..!

இரவை விரட்டி
ஓளியூட்டிடும் 
சூரியனும்..,
அனலை விரட்டி
குளிரூட்டும் 
நிலவும் - அன்பே 
உனைக் காண்கையில்
நான் உணர்ந்தேன் - உனைக்
காணாத வேளைகளில்
அனைத்தும் மாயமாய் 
மறைந்தோடியதே..!

விடியலில் கூட 
ஓரு விடியல் 
உன் தரிசனம்..,
மலர்களில் கூட 
மலர்ந்திடும் - உன்
புன்னகை இதழ்..!

இசையில் ஓர் 
நர்த்தனம்
உன் பேச்சு..,
சிரித்திடும் உன் 
கண்கள்
ஒரு நொடியேனும்
அழுதால் கூட
துடித்திடும் என் 
இதயம் -  உனைக்
காணாமல் 
துடிப்பிழக்கின்றன 
நீ எனக்கு இன்று 
அந்நியன் ஆனதால்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.