உன் சிந்தனை வட்டம்
எனக்குள்ளே
சுற்றிச் சுற்றி வர
என் வாழ்க்கையின்
வட்டம் பல்கிப் பெருகியது
உன்னால்..!
ஓற்றைத் திங்கள்
நிலவொளியில்
துள்ளி விளையாடும்
முயல் குட்டியாய்
ஆனந்தக் கூக்குரலிட்ட - உன்
குரலோசையில் - என்
யன்னல் திறக்கையில்
முகத்தில் அடிக்கும்
தென்றலாய்
உன் காட்சி..!
இரவை விரட்டி
ஓளியூட்டிடும்
சூரியனும்..,
அனலை விரட்டி
குளிரூட்டும்
நிலவும் - அன்பே
உனைக் காண்கையில்
நான் உணர்ந்தேன் - உனைக்
காணாத வேளைகளில்
அனைத்தும் மாயமாய்
மறைந்தோடியதே..!
விடியலில் கூட
ஓரு விடியல்
உன் தரிசனம்..,
மலர்களில் கூட
மலர்ந்திடும் - உன்
புன்னகை இதழ்..!
இசையில் ஓர்
நர்த்தனம்
உன் பேச்சு..,
சிரித்திடும் உன்
கண்கள்
ஒரு நொடியேனும்
அழுதால் கூட
துடித்திடும் என்
இதயம் - உனைக்
காணாமல்
துடிப்பிழக்கின்றன
நீ எனக்கு இன்று
அந்நியன் ஆனதால்..!
No comments:
Post a Comment