மணலிலே வரைந்திட்ட
ஓவியம் காற்றாலே
கலைவதைப் போல்
கலைந்து போனது - என்
கனவுகளும் நீயும் நிழலாய்
போனதால்....
தரையை முத்தமிட
மீண்டும் மீண்டும்
அலைகள் வருவதைப்போல் - என்
அன்பைப் பெற அலைகடலாய்
சுற்றிச் சுற்றி நீ வந்த காலங்கள்
கரைந்தோடிப் போகின்றது
இதழ் நனைக்கும் கண்ணீரிலே.....
இதயத்தின் விசும்பல்கள்
உயிர் வரை சென்று
உயிர் தொலைத்து வருகின்றது...
மணித்தியாலங்களின் நிமிடங்கள்
கரைந்தோடிச் செல்ல - நிமிடங்களில்
கரைந்தோடுகின்றது நிஜங்களோடு
கலந்தோடும் நினைவுகள்...
No comments:
Post a Comment