Friday, October 26, 2007

இதயத்தின் விசும்பல்கள்

இனியவள்

மணலிலே வரைந்திட்ட
ஓவியம் காற்றாலே
கலைவதைப் போல்
கலைந்து போனது - என்
கனவுகளும் நீயும் நிழலாய்
போனதால்....

தரையை முத்தமிட
மீண்டும் மீண்டும்
அலைகள் வருவதைப்போல் - என்
அன்பைப் பெற அலைகடலாய்
சுற்றிச் சுற்றி நீ வந்த காலங்கள்
கரைந்தோடிப் போகின்றது
இதழ் நனைக்கும் கண்ணீரிலே.....

இதயத்தின் விசும்பல்கள்
உயிர் வரை சென்று
உயிர் தொலைத்து வருகின்றது...

மணித்தியாலங்களின் நிமிடங்கள்
கரைந்தோடிச் செல்ல - நிமிடங்களில்
கரைந்தோடுகின்றது நிஜங்களோடு
கலந்தோடும் நினைவுகள்...

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.