Tuesday, October 23, 2007

!! கனவின் ஆயுள் !!

இனியவள்


என் கனவுகளின் 

ஆயுள் - உன்னைக் 

காணும் வரை

என் பாசத்தின் 

ஆயுள் - என் 

ஆயுள் முடியுவரை..!


என் இதழை 

அழகாய் தத்தெடுத்த 

புன்னைகையின் 

வசீகரம் - நீ 

என்னருகில்

இருக்கும் வரை..!


வானத்தில் மின்னும் 

நட்சத்திரமாய் மின்னுகின்றன

காதல் பரிசளித்துச் 

சென்ற நினைவுகள்

தற்போது இரவு நேரக் 

கவிதைகளாய்...!


வலியின் நிழல் கூட 

என்னைத் தீண்டாமல் 

அரணாய் இருந்த

உன் மீதான காதல் - இன்று 

நினைவு சுமையை 

சுமக்க வைத்து

வலிகளை கூலியாய் 

தந்து சென்று விட்டதே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.