என் கனவுகளின்
ஆயுள் - உன்னைக்
காணும் வரை
என் பாசத்தின்
ஆயுள் - என்
ஆயுள் முடியுவரை..!
என் இதழை
அழகாய் தத்தெடுத்த
புன்னைகையின்
வசீகரம் - நீ
என்னருகில்
இருக்கும் வரை..!
வானத்தில் மின்னும்
நட்சத்திரமாய் மின்னுகின்றன
காதல் பரிசளித்துச்
சென்ற நினைவுகள்
தற்போது இரவு நேரக்
கவிதைகளாய்...!
வலியின் நிழல் கூட
என்னைத் தீண்டாமல்
அரணாய் இருந்த
உன் மீதான காதல் - இன்று
நினைவு சுமையை
சுமக்க வைத்து
வலிகளை கூலியாய்
தந்து சென்று விட்டதே..!
No comments:
Post a Comment