நிலவாய் சுற்றிச் சுற்றி
வந்தேன் உன்னை -
பூமியாய் காட்சியளித்தாய்
நீ..!
தண்ணீரின்றி வாடிடும்
மலராய் - உன்
பார்வையின்றி
வாடித்தான் போனேன்
பல நாளாய்..!
சூரியனின்றி
தலை குனிந்திடும்
மலராய் - உன்
காட்சியின்றி தனித்துத் தான்
போனேன் தனிமையில்..!
காகிதத்தில் கண்ணீரால்
வடித்திட்டேன் கவிதைகள் பல
நினைவின் துணை கொண்டு..,
காதலின் அழகிய பரிசு
கற்பனையாம்..!
காகிதங்களின் தவம்
பேனை வரையும் கவிதைகளாம்
நிழலுக்கு உயிர் கொடுத்திட
உயிரற்றதாய் போய் விட்டது
நிஜங்களும் உயிரற்ற
ஓவியமாய்..!
வலியென நினைத்து
உன் நினைவுகளை
மூளை களைத்திட
அதனை உயிரென நினைத்து
இதயம் யாசிக்கிறது...!
No comments:
Post a Comment