Thursday, October 25, 2007

உன் தீண்டலுக்காய்...


என் மனதின் எண்ணங்களை
நீ படிப்பதற்காய் வரைகின்றேன்
கவிதைகள் பல...

என் கவிதையின் பிரதிபலிப்பு
உன் கண்கள் தீண்டா என் கண்கள்
உன் இதயம் கண்ட என் இதயம்
என் உயிருக்குள் வசிக்க
மறுக்கின்றது...

உனக்காய் நான் படைத்திட்ட
காவியங்கள் காத்துக் கிடக்கின்றன
உன் தீண்டலுக்காய்..

ஓரு முறை நோக்கி உயிர்
கொடுத்துச் சென்று விடு என்
கவிதைப் பூக்களுக்கு....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.