ஆசை ஆசையாய்
வாழ்வதற்கு காதல்
சிறந்த வழியென
உன்னை நான்
காதலித்தேன்..!
ஆனால் என் அன்பே
அணு அணுவாய்ச்
சாவதற்கு - காதல் தான்
சிறந்த வழியென
புரிய வைத்தாய்..!
உன் அன்பை
இழந்து நான் படும்
வேதனைகள் போதும்
என் உயிரைக் கேட்டால்
பரிசாகத் தருவேன் - ஆனால்
என்னுடன் இரண்டறக் கலந்த
உன் இனிமையான
நினைவுகளை மட்டும்
தீயில் எரிக்க
சொல்லாதே..!
No comments:
Post a Comment