Wednesday, October 24, 2007

!! காதல் பயணம் !!

இனியவள்

ஆசை ஆசையாய் 
வாழ்வதற்கு காதல் 
சிறந்த வழியென
உன்னை நான் 
காதலித்தேன்..!

ஆனால் என் அன்பே
அணு அணுவாய்ச் 
சாவதற்கு - காதல் தான் 
சிறந்த வழியென
புரிய வைத்தாய்..!

உன் அன்பை 
இழந்து நான் படும்
 வேதனைகள் போதும்
என் உயிரைக் கேட்டால்
பரிசாகத் தருவேன் -  ஆனால்
என்னுடன் இரண்டறக் கலந்த
உன் இனிமையான 
நினைவுகளை மட்டும் 
தீயில் எரிக்க 
சொல்லாதே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.