உயிரைக் கேடயமாக்கி
கண்ணைக் காக்கும்
இமைபோல் இரவு பகலாய்
என்னை அரவணைத்தாய்
காற்றுக் கூட
என்னைத் தீண்டாமல்..!
ஊமையானாய் வார்த்தைகளை
மெளனமாக்கி எனக்காக
கண்ணிமைகளை சாமரமாக்கி
எனக்கு வியர்க்காது வீசினாய்
நிலம் போல் தாங்கினாய்
நிலவு போல் குளிர்வித்தாய்
வைரம் போல் ஜொலிக்க
வைத்தாய் கனவிலும்
நீ..!
உன் நினைவை வாழ்வாக்கி
கனவை துணையாக்கி விட்டு
கரம் மாறி கைப்பிடித்து
இன்று எனை தவிக்கவிட்டு
சென்று விட்டாயே..!
அன்றைய நினைவு
தேனாய் இனிக்கின்றது
இன்றைய நிஜம் அனலாய்
சுடுகின்றதே
எல்லாம் நான்
என் காதலை
மறைத்ததாலா..!
No comments:
Post a Comment