Monday, October 29, 2007

நிஜம் வலிக்கின்றது..!!

இனியவள்

உயிரைக் கேடயமாக்கி
கண்ணைக் காக்கும் 
இமைபோல் இரவு பகலாய் 
என்னை அரவணைத்தாய்
காற்றுக் கூட 
என்னைத் தீண்டாமல்..!

ஊமையானாய் வார்த்தைகளை 
மெளனமாக்கி எனக்காக 
கண்ணிமைகளை சாமரமாக்கி
எனக்கு வியர்க்காது வீசினாய்
நிலம் போல் தாங்கினாய்
நிலவு போல் குளிர்வித்தாய்
வைரம் போல் ஜொலிக்க
வைத்தாய் கனவிலும்
நீ..!

உன் நினைவை வாழ்வாக்கி
கனவை துணையாக்கி விட்டு
கரம் மாறி கைப்பிடித்து
இன்று எனை தவிக்கவிட்டு
சென்று விட்டாயே..!

அன்றைய நினைவு 
தேனாய் இனிக்கின்றது
இன்றைய நிஜம் அனலாய்
சுடுகின்றதே
எல்லாம் நான்
என் காதலை
மறைத்ததாலா..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.