தேனமுதம் தந்த
உன் மேலான பார்வை
இன்று முள்ளாய் மாறி
என் இதயத்தைக்
குத்திக் குத்தி
கிழிக்கின்றது..!
என் கூட வரும் நிழல்
இன்று உன் பிரிவு
தந்த வலியால்
தந்த வலியால்
உதிரம் கொட்டுதடா..!
அனல் கக்கும்
சூரியன் பனியாய்
உருகினான் - நான்
உன் அருகாமை
வீட்டில்
இருக்கும் போது
உன் பெயரை
அழைத்தால் நான்
என்னையே என
ஏமாந்த காலம்
அப்போதே என்
காதலும்
உதயமானதே..!
அன்று குளிராய்
வந்து தழுவிய
தென்றல் கூட
இன்று அனலாய்
சுடுகின்றதடா
நான் உன்னை விட்டு
விலகிய பின்..!
நிஜத்திலே உண்டான
உன்மீதான
ஒருதலை பட்ச
காதல் இன்பத்தை
அனுபவித்த நான்
பிரிதலினால் உண்டான
வேதனையை தாங்க
முடியாமல் - நெருப்பில்
விழுந்த புழுவாய்
துடிக்கின்றேனே..!
No comments:
Post a Comment