Tuesday, October 23, 2007

உன் நினைவுகள்

இனியவள்

தண்ணீரால் அழித்தால்
அழியாது என்று
கண்ணீரால் 
அழிக்கின்றேன்
இருந்தும் அழிய 
மறுக்கின்றனவே
உன் நினைவுகள்..!

வாழ்வில் 
நினைப்பதற்கு
சில மட்டுமே - ஆனால்
மறப்பதற்கோ பல..!

உன் விழியா....!!
உன் முகமா....!!
உன் குரலா....!!

எதையென்று 
மறப்பேன் - இந்த 
ஒற்றை மனதை
வைத்துக் 
கொண்டு..!

இறுதியாய் 
ஒரு தேடல்
உன் மனதிற்காய்
சேர்ந்து வாழ்வதற்கு
அல்ல சேர்ந்து 
மறப்பதற்கு..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.