எனக்கு உயிர்
அழித்துக் கொண்டிருக்கிறது
நான் உன்னருகில்
இருந்த நாட்கள்..!
எதிர்காலத்தைத் தேடி
நிகழ்காலத்தைத் தொலைத்து
வாழ்கின்றேன் இங்கு
நான் தனிமையில் உன்
நினைவுகளோடு..!
முட்கள் மீதான இந்த
நரக வாழ்க்கையில்
இருந்து உன்னோடு நான்
வாழ்வேனா என
நகர்த்திக் கொண்டிருக்கின்றேன்
கடிகார முட்களை வேக
வேகமாய்..!
விடியும் ஓவ்வொரு நாட்களும்
நீ என்னை வந்தடைவாய் என்ற
நற்செய்தியைக் கேட்க என்
ஓவ்வொருஅனுக்களும் துடித்துக்
கொண்டிருக்கின்றன..!
தவிக்கிறேன் அன்பே
எதிர்கால வாழ்வைச் சிந்தித்து
நான் பூண்டிருக்கும்
இந்த வனவாசம்
எம் நிகழ்கால வாழ்வை
சுக்குநூறாச் சிதறடித்து
விடுமென..!
வனவாசம் கலைத்து
உன் வாசல் தீண்டவே
என் மனம் துடிக்கிறது
எதிர்காலம் என்ற கோடு
என்னைத் தடுக்கிறது..!
நாளை விடியும்
விடியலாவது என்னிடம்
உன்னைச் சேர்க்கட்டும்
கனவுகளோடும் நிழல்களோடும்
இனியும் என்னால்
நகர்த்த முடியாது - இந்த
கடினமான வாழ்க்கையை..!
No comments:
Post a Comment