Tuesday, October 23, 2007

உளி..!




வெற்றிகள் உனக்கு
சிற்பத்தைப் 
பரிசளித்து
சென்று விட - நீயோ
உளிகளின்றி 
தவிக்கின்றாய்..!

வெற்றிகள் உனக்கு
சிற்பத்தைப் 
பரிசளிக்கலாம் - ஆனால்
தோல்விகளே உனக்கு
உளியைப் 
பரிசளிக்கும்
இதனை நீ
மறந்து விடாதே..!

மழை நதி 
விதை அனைத்தும் 
விழுவதால் எழுச்சி 
கொள்கின்றன - ஆனால் 
நீ மட்டும் விழுந்த 
இடத்திலே புதைகுழி 
தோண்டுகின்றாய்
உனக்கு..!

தேய்ந்து தேய்ந்து 
வளர்வது தோல்வி 
என நினைத்து
நிலவு இரவில் 
தோன்றாமல்
ஒளிவதில்லையே 
மீண்டும் மீண்டும் 
வந்து எம்மைக்
குளிவிக்கின்றனவே
நீ மட்டும் ஏனோ 
தோல்விகளைச் சுமந்து 
ஓடி ஒளிகின்றாய்
தோல்விகளை 
வெற்றியெனும் படியாக 
மாற்ற முயற்சிக்காமல்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.