காதல் கனவாகிப்
போன பின்பும்
கசக்கும் உன்
நினைவுகளை கண்கள்
நாடிச் செல்வதேன்..!
இதயம் இன்னும்
வசந்த காலத்தை
இனிமையாக எதிர்பார்த்து
தோற்றுப் போவதுமேன்..!
நிழலை நிஜமென
நினைத்து - மனம்
இன்னும் தொடர்வது
ஏனோ..!
நினைத்து பார் அன்பே
நினைவுகளில் இருந்து
நீங்காமல் இருக்கும்
உன்னை நிராகரிக்க
முடியுமா என்னால்..!
முழுதாய் உன்
காதலை எனக்கு
தந்து விடு - இல்லையேல்
நீயே என்னை
கருணைக் கொலை
செய்து விடு..!
உன் காதல் தீயில்
எரியும் என் உள்ளத்தில்
உன் உயிரை
என்னுள் புகுத்தி
உயிர்பிச்சை தந்துவிட
மாட்டாயா..!
No comments:
Post a Comment