Tuesday, October 23, 2007

!! உயிர்ப் பிச்சை !!

இனியவள்

காதல் கனவாகிப் 
போன பின்பும் 
கசக்கும் உன்
நினைவுகளை கண்கள்
நாடிச் செல்வதேன்..!

இதயம் இன்னும் 
வசந்த காலத்தை 
இனிமையாக எதிர்பார்த்து
தோற்றுப் போவதுமேன்..!

நிழலை நிஜமென
நினைத்து - மனம்
இன்னும் தொடர்வது
ஏனோ..!

நினைத்து பார் அன்பே
நினைவுகளில் இருந்து
நீங்காமல் இருக்கும்
உன்னை நிராகரிக்க
முடியுமா என்னால்..!

முழுதாய் உன் 
காதலை எனக்கு 
தந்து விடு - இல்லையேல் 
நீயே என்னை
கருணைக் கொலை
செய்து விடு..!

உன் காதல் தீயில்
எரியும் என் உள்ளத்தில்
உன் உயிரை 
என்னுள் புகுத்தி
உயிர்பிச்சை தந்துவிட
மாட்டாயா..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.