Friday, October 26, 2007

இரத்தோட்டமாய்..!!




என் இதயம் வரைவது 
உன் பெயரை 
உன் பெயருக்குள் இருப்பதோ 
என் பெயர் - இருவருக்குமோ
செல்லப் பெயர்
ஒன்றே..!

ஓவ்வொரு நாளும் - நம் 
பெயரை மீள் பதிவு 
செய்கின்றேன் - என் 
இதயத்துக்குள்.., 
அந் நொடியில் இருந்து 
என் இதயம் 
புத்துயிர் பெற்றுத் 
துடிக்கின்றது 
வேக வேகமாய்..! 

வரைந்து வரைந்து 
வர்ணங்கள் இழக்கின்றேன்
நம் பெயரை.., 
இழந்த வர்ணங்களை 
வானவில்லாய் 
மீட்டுத் தருகின்றதே - உன்  
உதட்டோர புன்னகை...! 

நம் பெயர் என்
நெஞ்சோடு
இருக்கும் வரை
உன் நினைவுகளே 
இரத்தோட்டமாய் 
பரவுகின்றது - என் 
நாடி நரம்பெங்கும்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.