என் இதயம் வரைவது
உன் பெயரை
உன் பெயருக்குள் இருப்பதோ
என் பெயர் - இருவருக்குமோ
செல்லப் பெயர்
ஒன்றே..!
ஓவ்வொரு நாளும் - நம்
பெயரை மீள் பதிவு
செய்கின்றேன் - என்
இதயத்துக்குள்..,
அந் நொடியில் இருந்து
என் இதயம்
புத்துயிர் பெற்றுத்
துடிக்கின்றது
வேக வேகமாய்..!
வரைந்து வரைந்து
வர்ணங்கள் இழக்கின்றேன்
நம் பெயரை..,
இழந்த வர்ணங்களை
வானவில்லாய்
மீட்டுத் தருகின்றதே - உன்
உதட்டோர புன்னகை...!
நம் பெயர் என்
நெஞ்சோடு
இருக்கும் வரை
உன் நினைவுகளே
இரத்தோட்டமாய்
பரவுகின்றது - என்
நாடி நரம்பெங்கும்..!
No comments:
Post a Comment