Tuesday, October 23, 2007

மிகவும் கடினமானது

இனியவள்

உனக்கும் அழுவது
பிடிக்காது - உன்
சிரித்த முகம்
பார்த்த எனக்கும்
அழுவது பிடிக்காது
ஆனால் இன்று
கண்ணீரிலே கரைகின்றது
என் வாழ்க்கை..!

உனக்காக நான் 
செய்வதென்றால் - அது
மிகவும் கடினமானது
இப்போது - உன் 
பிரிவில் நான் 
அழாமல் இருப்பதே..!

முயற்சித்து பார்க்கின்றேன்
அப்போதே
கண்களின் இரு
கரைகளிலும்
கண்ணீர்த் துளிகள்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.