முடிவில்லா வானம்
போல் முடியவில்லை
நான் போகும்
வாழ்க்கைப் பாதை..!
காற்றைச் சுவாசிக்க
வெறுக்கின்றேன் - உன்
மூச்சுக் காற்றையும்
தாங்கி
வருவதால்..!
கண்கள் காணும்
காட்சிகள் அனைத்திலும்
உன் விம்பம் காணுவதால்
கண் மூடிவாழ
முயற்சிக்கின்றேன்..!
இருளில் ஒளியாய் மூடிய
விழிகளுக்குள் கள்ளமாய்ச்
சிரிக்கும் உன் விம்பம் - என்
சிந்தையைக் கலைக்கின்றது..!
விழிகளை மூடவும்
முடியாமல் திறக்கவும்
முடியாமல் தவிக்கின்றேன்
ஒரு தலைக்கொல்லி
எறும்பாய்..
No comments:
Post a Comment