Sunday, October 28, 2007

இரு தலைக்கொல்லி

இனியவள்

முடிவில்லா வானம் 

போல் முடியவில்லை 

நான் போகும்

வாழ்க்கைப் பாதை..!


காற்றைச் சுவாசிக்க 

வெறுக்கின்றேன் - உன் 

மூச்சுக் காற்றையும் 

தாங்கி

வருவதால்..!


கண்கள் காணும் 

காட்சிகள் அனைத்திலும் 

உன் விம்பம் காணுவதால்

கண் மூடிவாழ

முயற்சிக்கின்றேன்..!


இருளில் ஒளியாய் மூடிய

விழிகளுக்குள் கள்ளமாய்ச்

சிரிக்கும் உன் விம்பம் - என்

சிந்தையைக் கலைக்கின்றது..!


விழிகளை மூடவும் 

முடியாமல் திறக்கவும் 

முடியாமல் தவிக்கின்றேன்

ஒரு தலைக்கொல்லி 

எறும்பாய்..

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.