Sunday, October 28, 2007

வலிகளின் கதறல்கள்..!

இனியவள்

நிசப்தத்தில் 
தொலைத்து
விட்டேன் 
என் இன்னிசையை..!

ஒளியில் இருள் தேடி
இருளில் ஒளி தேடியே
தொலைத்து விட்டேன்
மீண்டும் செல்ல முடியாத
இறந்த காலத்தில்...!

சிந்தித்து சிந்தித்து
சிதறிய அறிவுக்
களஞ்சியமல்ல - என்
கவிதைகள்...!

மனதை அழுத்தி
உயிரை உறிஞ்சிக்
கொண்டிருக்கும் 
வலிகளின்
கதறல்கள்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.