இறக்கையில்லாமல் பறக்கத்
துடித்திடும் உயிர்களின்
மத்தியிலே இறக்கையிருந்தும்
பறக்க மனமின்றி வாழ்கின்றேன்
உன்னால்...
மலர்களின் நடுவினிலே
மலராய் இருந்த நான்
வாசம் இழந்து அண்டை
நாட்டு அகதி போல்
அலைகின்றேன் உன்னால்...
மரங்களைக் குளிப்பாட்டி
பொலிவுற விளையும்
மழையாய் உன்னை என்
அன்பெனும் மழையினில்
நனைத்து புதிய மனிதனாய்
மாற்றிய எனக்கு -இன்று
நீ புதியவனாய் தோன்றியதால்
அன்பின்றித் தவிக்கின்றேன்
உன்னால்....
மேகத்தின் பஞ்சனையில்
துயில் கொள்ள பறந்திடும்
பறவையாய் உன் இதயமெனும்
பஞ்சனையில் அடைக்கலம்
பெறத் துடித்த நான் - இதயம்
இழந்து துடிக்கின்றேன்
உன்னால்...
ஆனந்த மழையினிலே
என்னைக் குளிப்பாட்டிய
உன் வருகைகள் - என்னை
கண்ணீர் மழையில் நனைய
வைக்கின்றதே - கண்ணீரின்
நிழல் கூட அறியாது இருந்த
என் கண்கள் கண்ணீர் மழை
பொழிகின்றதே உன்னால்...
No comments:
Post a Comment