அமைதியான
இரவு நேரம்
கண் சிமிட்டும்
நட்சத்திரங்கள் குளிர்ச்சியான
வெளிச்சத்தை பாய்ச்சி
கொண்டிருக்கும் நிலவு
இந்த ரம்மியமான
இரவுப் பொழுதை
குலைத்து கொண்டிருந்தன
நாய்களின் ஈனக் குரல்கள்..!
வானத்து நட்சத்திரங்கள்
தமது ஜோடிகளை தேடி
நகர்ந்து கொண்டிருந்த வேளை
என் மனதும் அவனது நினைவுகளை
காவியமாக்க ஒன்றின் மேல் ஒன்றாக
அடுக்கிக் கொண்டிருந்தன
நினைவுப்படிகளை..!
இரவு நேர தென்றல் காற்று
அவனது மூச்சுக்
காற்றை ஞாபகப்படுத்த
தவழ்ந்து வரும்
குழந்தையை
அரவணைக்கும் அன்னை போல்
நினைவுகள் - என்
இதயத்தை அரவணைத்துக்
கொண்டன..!
வெட்ட வெளியாய் - இரவுநேர
வானத்தை நட்சத்திரங்கள்
அலங்கரிப்பது போல்
என் மனதை அவன் நினைவுகள்
அலங்கரித்துக்
கொண்டிருந்தன..!
தூக்கம் கண்களை
அரவணைக்கவில்லை துக்கம்
என் இதயத்தை அரவணைத்துக்
கொண்டது..!
கண்களை மூடினால்
அவன் நினைவலைகளே
கண்களில் நிழலாட
மூடிய விழிகள் திறந்து
கொண்டன..!
திறந்த விழிகள்
திறந்த படியே ஏதோ
ஒன்றை எதிர் பார்த்து
காத்துக் கொண்டிருந்தன..!
No comments:
Post a Comment