Wednesday, October 31, 2007

கடலில் கலந்த மழைத்துளியாய்

இனியவள்

அன்பெனும் நீர் தெளித்து
மனம் என்னும் நிலத்தில்
காதல் கோலம் போட்டு விட்டாய்
அழகாய்...

அழகுக்குள் ஒர் அழகாய்
உன் காதல் என்னை
அழகுபடுத்த ஆர்பாரித்து நிற்கின்றேன்
கடலலைகள் போல்...

உன் காதல் மாற்றியது
இவ்வுலகை அழகாய் - என்
கண்களுக்கு மட்டும்
மீனாய் நீந்தி திரிந்தேன்
உன் அன்பெனும் கடலில்...

முத்தாய் கொட்டும் உன்
சிரிப்பை அள்ளிக் கோர்த்தேன்
மாலையாய்..

மாலைச்சூரியன் நிலவைப்
பரிசளித்துச் சென்றுவிட
ஆனந்தக் குக்கூரலிட்டன
விண்மீன்கள் குளிர்ச்சியில்...

நிலவின் ஒளியில்
உன் நினைவின்
துணையில் இரவின்
தனிமையில் இன்றைய
நினைவுகளை கவிதை
புனைந்து கொண்டிருந்தன
மனம்...

காற்றுக்கு கூட வேலி போட முடியும்
அன்பே ஆனால் உன் நினைவுகளுக்கு
வேலிபோட முடியவில்லையே...

ஆழ்ந்த உறக்கத்தில் கூட
சிரிக்கின்றேன் ஆழமாய் உற்று
நோக்கினேன் என்னுள் - நீ
இரண்டறக் கலந்து விட்டாய்
கடல்நீரில் கலந்து விட்ட
மழைத்துளியாய்...

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.