அன்பெனும் நீர் தெளித்து
மனம் என்னும் நிலத்தில்
காதல் கோலம் போட்டு விட்டாய்
அழகாய்...
அழகுக்குள் ஒர் அழகாய்
உன் காதல் என்னை
அழகுபடுத்த ஆர்பாரித்து நிற்கின்றேன்
கடலலைகள் போல்...
உன் காதல் மாற்றியது
இவ்வுலகை அழகாய் - என்
கண்களுக்கு மட்டும்
மீனாய் நீந்தி திரிந்தேன்
உன் அன்பெனும் கடலில்...
முத்தாய் கொட்டும் உன்
சிரிப்பை அள்ளிக் கோர்த்தேன்
மாலையாய்..
மாலைச்சூரியன் நிலவைப்
பரிசளித்துச் சென்றுவிட
ஆனந்தக் குக்கூரலிட்டன
விண்மீன்கள் குளிர்ச்சியில்...
நிலவின் ஒளியில்
உன் நினைவின்
துணையில் இரவின்
தனிமையில் இன்றைய
நினைவுகளை கவிதை
புனைந்து கொண்டிருந்தன
மனம்...
காற்றுக்கு கூட வேலி போட முடியும்
அன்பே ஆனால் உன் நினைவுகளுக்கு
வேலிபோட முடியவில்லையே...
ஆழ்ந்த உறக்கத்தில் கூட
சிரிக்கின்றேன் ஆழமாய் உற்று
நோக்கினேன் என்னுள் - நீ
இரண்டறக் கலந்து விட்டாய்
கடல்நீரில் கலந்து விட்ட
மழைத்துளியாய்...
மனம் என்னும் நிலத்தில்
காதல் கோலம் போட்டு விட்டாய்
அழகாய்...
அழகுக்குள் ஒர் அழகாய்
உன் காதல் என்னை
அழகுபடுத்த ஆர்பாரித்து நிற்கின்றேன்
கடலலைகள் போல்...
உன் காதல் மாற்றியது
இவ்வுலகை அழகாய் - என்
கண்களுக்கு மட்டும்
மீனாய் நீந்தி திரிந்தேன்
உன் அன்பெனும் கடலில்...
முத்தாய் கொட்டும் உன்
சிரிப்பை அள்ளிக் கோர்த்தேன்
மாலையாய்..
மாலைச்சூரியன் நிலவைப்
பரிசளித்துச் சென்றுவிட
ஆனந்தக் குக்கூரலிட்டன
விண்மீன்கள் குளிர்ச்சியில்...
நிலவின் ஒளியில்
உன் நினைவின்
துணையில் இரவின்
தனிமையில் இன்றைய
நினைவுகளை கவிதை
புனைந்து கொண்டிருந்தன
மனம்...
காற்றுக்கு கூட வேலி போட முடியும்
அன்பே ஆனால் உன் நினைவுகளுக்கு
வேலிபோட முடியவில்லையே...
ஆழ்ந்த உறக்கத்தில் கூட
சிரிக்கின்றேன் ஆழமாய் உற்று
நோக்கினேன் என்னுள் - நீ
இரண்டறக் கலந்து விட்டாய்
கடல்நீரில் கலந்து விட்ட
மழைத்துளியாய்...
No comments:
Post a Comment