அன்பே...தென்றலாய்
வந்து இதமாய்
கடந்து சென்றாய்...
புயலின் தாக்கத்தை
விட்டுச்
செல்கின்றாய்..!
வெளிச்சப் புள்ளியாய்
தோன்றி மெழுகாய்
ஒளி தந்து
கடந்தாய்...
ஒரு மின்னலின்
அதிர்வை பதிந்து
செல்கின்றாய்..!
ஒற்றை மலராகவே
வந்தாய் அழகிய
பூந்தோட்டமாய் நறுமணம்
கமழ்கின்றாய்
எப்படி என்னுள்
நுழைந்தாய்..!
நானே அறியாத
ஒரு கணத்தில்...
பகல் வானம் போல்
வெறுமையாய் இருந்த
என்னில் - இரவு
வான் நட்சத்திரங்களாய்
உன் நினைவை
விதைத்து விட்டாய்..!
உன் ஞாபக அலைகள்
சிறு தூறலாக
துளிர்த்து அருவியாய்
ஆர்ப்பரிக்கின்றது
யார் நீ...!
உன்னைச்
சொல்லாமலேயே
என்னைக்
கொல்கின்றாய்
என் முதல் கனவே..!
1 comment:
hey its good u may be the next vairamuthuu ( oaarthupa pogura pokil vaali, vairamuthu) elam kaanama poyduvaanga unala
Post a Comment