Wednesday, October 24, 2007

!! யார் வரவுக்காக !!

இனியவள்

முகில்களை போர்வையாக்கி
உறக்கம் கொள்ளத்
துடித்த சூரியக் கதிர்கள்
மறைந்து மழைத்துளிகள்
விரைகின்றன - நிலவின்
கறையைத் துடைக்க..!

நிலவின் மடியில்
இரவுதுயில் கொள்ள 
தென்றல் துணை கொண்டு 
இலைகள் வெண்சாமரம் 
வீசுகின்றன - உலகமே உறங்க
உறங்கா விழியுடன் 
இதயத்தின் வலியுடன்
ஓர் ஜீவன் துயில்
கலைந்து வாழ்விழந்து
காத்திக் கிடக்கின்றது
யார் வரவுக்காகவோ..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.