வலி கொண்டு
துடித்திடும் - என்
இதயத்தை
தென்றல் போல்
அரவணைக்க ஓடோடி
வா அன்பே..!
மேகங்கள் ஒன்றுக்குள்
ஒன்று மறையும் போது
உன்னுள் எனைப்
புதைத்த நினைவுகள்
நிழலோடியது
மனக் கண்களில்...!
மழைத்துளிகள் மண்ணை
அரவணைக்க
படையெடுக்கின்றன..,
வானவில்லை குடையாக்கி
மேள தாளங்களோடு
நீயும் நானும் கைகோர்த்து
மழையில் நீராடிய வேளை
நொடியில் மின்னலடித்தது
அக்கணமே புரிந்தது
அது நிஜமல்ல
நிழலென்று..!
விடியும் விடியல்கள் - உன்
நினைவுகளைப்
பறைசாற்றிச் செல்ல - என்
இதயம் வடிக்கிறது
ஊமை ராகங்களை...!
No comments:
Post a Comment