என்னுயிரே..,
இரவின் தனிமையை
தவிர்க்க - உன்
நினைவுகளோடு
உறவாடுகின்றேன்..!
ஒவ்வொரு இரவும்
நித்திரைக்கு வழிவிடும்
போது - நம் பெயரையே
கடை வார்த்தையாக
உச்சரிக்கின்றேன்..!
மூடிய விழிகள் மூடியபடியே
நிரந்தரமாக நான்
தூங்கிவிட்டால் - நான்
இறுதியாக உச்சரித்தது
நம் பெயராகவே
இருக்கட்டும்..!
அடுத்த பிறவி
எனக்கு தேவையில்லை
என்னுயிர் காற்றிலே கலந்து
என்றென்றும் உன்
அருகில் இருப்பேன்..!
No comments:
Post a Comment