Wednesday, October 24, 2007

!! உயிரின் ஆசை !!

இனியவள்

என்னுயிரே..,
இரவின் தனிமையை 
தவிர்க்க - உன் 
நினைவுகளோடு 
உறவாடுகின்றேன்..!

ஒவ்வொரு இரவும் 
நித்திரைக்கு வழிவிடும் 
போது - நம் பெயரையே 
கடை வார்த்தையாக 
உச்சரிக்கின்றேன்..!

மூடிய விழிகள் மூடியபடியே 
நிரந்தரமாக நான் 
தூங்கிவிட்டால் - நான் 
இறுதியாக உச்சரித்தது 
நம் பெயராகவே 
இருக்கட்டும்..! 

அடுத்த பிறவி 
எனக்கு தேவையில்லை 
என்னுயிர் காற்றிலே கலந்து 
என்றென்றும் உன் 
அருகில் இருப்பேன்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.