Monday, October 29, 2007

தத்தளிக்கும் ஓடம்

இனியவள்

முட்களாய் நீ என்னைக்
குத்த மலராய் - உன்
நினைவுகள் என்னை
வருடிச் செல்கின்றன...!

காதல் என்னும் வானத்தில்
நிலவாய் ஜொலிக்கும் 
உன்னை

அடைய காற்றை நூலாக்கி

விரைகின்றேன் உன் கரம் பிடிக்க
மின்னலாய் வந்து அறுத்தெறிந்து
செல்கின்றாய் என்னை..!

மேகமாய் இருக்கும் என் சோகத்தை
காற்றாய் மாறி கலைப்பாயென நானிருக்க
இயற்கையில் இருக்கும் பசுமைபோல்
நிலைக்கச் செய்து விட்டாயே
சோகத்தை என்னுள்...!

உன் பிரிவை மறக்க கவிதை
என்னும் விதையை என்னுள்
விதைத்தேன் மரமாய் வளர்ந்தது
கவிதை மட்டுமல்ல உன்னால்
ஏற்பட்ட ரணங்களும் தான்...!

நினைவை மறக்க நிழலை
என்னுள் திணித்தேன் − நிழலே
உன் உருவமாய் நிழலாட
என் உயிர் ஓடமாய் தத்தளிக்கின்றது
நடுக்கடலிலே....!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.