நினைவுக் குழந்தைகள்
கண்திறக்கின்றன
தனிமையின்
இனிமைகளில்
திளைத்திட..!
சூரியனை தரிசித்திட
தென்றலை அரவணைக்கின்றன
விரியா மொட்டுக்கள்
நாளை மலர்ந்திட
தூக்கத்தை வாரி
அணைக்கின்றேன்
நாளை விடிந்திடும்
விடியலில் உன்னை
நான் காண்பதற்காய்..!
சூரியன் ஓளியினில்
மின்னிடும் பனித்துளியாய்
உன் மீதான காதல் கொண்டு
ஜொலிக்கின்றேன்
இரவு நேர
வெண்ணிலவாய்..!
No comments:
Post a Comment