Sunday, October 28, 2007

இரவு நேர நிலவு..!

இனியவள்

நினைவுக் குழந்தைகள்
கண்திறக்கின்றன 
தனிமையின் 
இனிமைகளில் 
திளைத்திட..!

சூரியனை தரிசித்திட 
தென்றலை அரவணைக்கின்றன 
விரியா மொட்டுக்கள் 
நாளை மலர்ந்திட
தூக்கத்தை வாரி 
அணைக்கின்றேன்
நாளை விடிந்திடும் 
விடியலில் உன்னை 
நான் காண்பதற்காய்..!

சூரியன் ஓளியினில் 
மின்னிடும் பனித்துளியாய்
உன் மீதான காதல் கொண்டு 
ஜொலிக்கின்றேன்
இரவு நேர 
வெண்ணிலவாய்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.