Tuesday, October 23, 2007

வழி தேடி.. விழி வைத்து..!

இனியவள்


முத்தாப்பாய் ஓர் சிரிப்பு 
மூங்கில்களோடு
கதை பேசிடும் 
தென்றல் காற்றாய்..! 

நிலவோடு கதை பேசிடும் 
வானமாய் - கண்களோடு 
கலந்திட்ட காட்சியாய் 
உணர்வோடு கலந்திட்ட 
உயிர்த் துடிப்பாய் 
உன் நினைவுகள்..!

கண்ணீர் கூட 
காய்ந்திடும் காலம் 
உண்டாம் 
வரண்டு போய்விட்ட 
நிலமாய்..,
காலத்தால் அழியாத 
காவியமாம் - நான் 
உன்னருகில் இருந்த 
வசந்த காலம்..!

கண்ணீரால் வரையப்பட்ட  
ஓவியமாய் - என் 
ஒருதலைக் காதல்..,
திரிக்க திரிக்க 
கயிறாகிடும் சணலாய் 
மறக்க மறக்க 
கூடுகின்றது - வலி 
கொண்டு உயிர் வாங்கிடும் 
உன் நினைவுகள்..!

நினைத்திட பல 
வழிகள் உண்டு - என் 
இதயத்தினிலே 
மறந்திட வழிகள் இன்றி
வழிதேடி விழி வைத்துக் 
காத்திருக்கிறேன்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.