முத்தாப்பாய் ஓர் சிரிப்பு
மூங்கில்களோடு
கதை பேசிடும்
தென்றல் காற்றாய்..!
நிலவோடு கதை பேசிடும்
வானமாய் - கண்களோடு
கலந்திட்ட காட்சியாய்
உணர்வோடு கலந்திட்ட
உயிர்த் துடிப்பாய்
உன் நினைவுகள்..!
கண்ணீர் கூட
காய்ந்திடும் காலம்
உண்டாம்
வரண்டு போய்விட்ட
நிலமாய்..,
காலத்தால் அழியாத
காவியமாம் - நான்
உன்னருகில் இருந்த
வசந்த காலம்..!
கண்ணீரால் வரையப்பட்ட
ஓவியமாய் - என்
ஒருதலைக் காதல்..,
திரிக்க திரிக்க
கயிறாகிடும் சணலாய்
மறக்க மறக்க
கூடுகின்றது - வலி
கொண்டு உயிர் வாங்கிடும்
உன் நினைவுகள்..!
நினைத்திட பல
வழிகள் உண்டு - என்
இதயத்தினிலே
மறந்திட வழிகள் இன்றி
வழிதேடி விழி வைத்துக்
காத்திருக்கிறேன்..!
No comments:
Post a Comment