கடிகார முற்களின்
சுழற்சியில் சுற்றிக்
கொண்டிருக்கிறது
என் காதலோடு சேர்ந்த
கனவுகளும்..!
வலிகளெனும் மேகங்கள்
மழையாய் கரைந்தோட
இரவு நேர நட்சத்திரமாய்
ஜொலித்தேன் ஒற்றைக்
காதல் வானிலே..!
உன் கன்னக் குழியில்
தொலைத்து விட்டேன்
என் தொலை தூரப்
பார்வையை...!
தொலைத்து விட்டேன்
என் தொலை தூரப்
பார்வையை...!
உன் நினைவுகளின்
துணை கொண்டு
தேடித் தேடி அலைகின்றேன்
நான் தொலைத்த காலடிச்
சுவடுகளை..!
தேடல்கள் தொடர
என் வாழ்க்கைப்
பயணம் பயணிக்கின்றது
மரணித்து விட்ட
என் காதலின்
கல்லறையிலே..!
No comments:
Post a Comment