Saturday, October 27, 2007

காதலின் கல்லறையிலே..!

இனியவள்

கடிகார முற்களின்
சுழற்சியில் சுற்றிக்
கொண்டிருக்கிறது
என் காதலோடு சேர்ந்த
கனவுகளும்..!

வலிகளெனும் மேகங்கள்
மழையாய் கரைந்தோட
இரவு நேர நட்சத்திரமாய்
ஜொலித்தேன் ஒற்றைக்
காதல் வானிலே..!

உன் கன்னக் குழியில்
தொலைத்து விட்டேன்
என் தொலை தூரப்
பார்வையை...!

உன் நினைவுகளின்
துணை கொண்டு 
தேடித் தேடி அலைகின்றேன் 
நான் தொலைத்த காலடிச்
சுவடுகளை..!

தேடல்கள் தொடர
என் வாழ்க்கைப்
பயணம் பயணிக்கின்றது
மரணித்து விட்ட 
என் காதலின் 
கல்லறையிலே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.