Tuesday, October 23, 2007

முடிவற்ற முடிவு..!

இனியவள்

மேகத்தைக் கற்களாய் கொண்டு 
காற்றை உளியாக்கி அழகிய 
சிற்பம் உருவாக்க 
முயல்கின்றது இயற்கை 
மேகத்தைக் கலைத்திட 
முயல்கின்றது - தென்றல் 
என்பதனை அறியாமல்..!

பாறையாய் உறைந்து கிடந்த என் 
இதயத்தை - உன் 
காதல் எனும் 
உருவம் தீட்டி 
அன்பெனும் உளி கொண்டு 
செதுக்கினேன் நானே 
பாறையாய் மாறி
இயற்கையாய் உருப்பெற்ற 
என் காதல் 
முடிவற்ற முடிவாய் 
முடிந்து போனது..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.