மேகத்தைக் கற்களாய் கொண்டு
காற்றை உளியாக்கி அழகிய
சிற்பம் உருவாக்க
முயல்கின்றது இயற்கை
மேகத்தைக் கலைத்திட
முயல்கின்றது - தென்றல்
என்பதனை அறியாமல்..!
பாறையாய் உறைந்து கிடந்த என்
இதயத்தை - உன்
காதல் எனும்
உருவம் தீட்டி
அன்பெனும் உளி கொண்டு
செதுக்கினேன் நானே
பாறையாய் மாறி
இயற்கையாய் உருப்பெற்ற
என் காதல்
முடிவற்ற முடிவாய்
முடிந்து போனது..!
No comments:
Post a Comment