புத்தம் புதிதாய்
மலரயிருக்கும் பூமியில்
கால் பதிப்பதற்கு உன்
பாதங்களைத் தூய்மையாக்கு
சிந்தனையில் தெளிவும்
மனதில் உறுதியும்
கொண்டு உன் நெஞ்சமதனை
ஒரு கணம் தட்டிக்கேள்.... !
உன்னுள் உறைந்து இருக்கும்
புதிய ரக சிந்தனையினை
வடிகால் கொண்டமைத்து
வழிசமைத்து ஒடவிடு
அப்போது உன்னையே
நீ அறிவாய்... !
உன்னுள் புதைக்கப்பட்ட
ஒவ்வொரு ஞானச் சிதைவுகளை
சிரத்தையோடு தோண்டியெடு
உயிரோடு உரசிச் செல்லும்
உணர்வுகளுக்கு மதிப்பளிப்பாய்... !
காலத்தின் தேவைக்காய்
கருணையோடு ஒப்பிவித்து
கலங்கியழும் கல்லறை மீதினில்
சிறு தீபமென எரியும்
மெழுகுவர்த்தியாய் நீயிரு
மனிதத்தின் நாயகனாய்
உன்னையே நீ அறிவாய்..!
No comments:
Post a Comment