Tuesday, October 23, 2007

உன்னையே நீ அறிவாய்

புத்தம் புதிதாய் 
மலரயிருக்கும் பூமியில் 
கால் பதிப்பதற்கு உன் 
பாதங்களைத் தூய்மையாக்கு 
சிந்தனையில் தெளிவும் 
மனதில் உறுதியும் 
கொண்டு உன் நெஞ்சமதனை 
ஒரு கணம் தட்டிக்கேள்.... ! 

உன்னுள் உறைந்து இருக்கும் 
புதிய ரக சிந்தனையினை 
வடிகால் கொண்டமைத்து 
வழிசமைத்து ஒடவிடு 
அப்போது உன்னையே 
நீ அறிவாய்... ! 

உன்னுள் புதைக்கப்பட்ட 
ஒவ்வொரு ஞானச் சிதைவுகளை 
சிரத்தையோடு தோண்டியெடு
உயிரோடு உரசிச் செல்லும் 
உணர்வுகளுக்கு மதிப்பளிப்பாய்... ! 

காலத்தின் தேவைக்காய் 
கருணையோடு ஒப்பிவித்து 
கலங்கியழும் கல்லறை மீதினில் 
சிறு தீபமென எரியும் 
மெழுகுவர்த்தியாய் நீயிரு 
மனிதத்தின் நாயகனாய் 
உன்னையே நீ அறிவாய்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.