Friday, October 26, 2007

கண் பார்வையில்

இனியவள்

காதலெனும் செடியில்
அன்பெனும் மலரைத்
தந்து உயிரெனும் வேரைப்
பிடுங்கிச் செல்கின்றாய்...

நினைவுகள் என்னை
அணைக்க கவிதைகளை
நான் அணைத்துக்
கொள்கின்றேன்....

கண் பார்வையில் இருந்து
விலக்கிய உன்னை
என் உயிர்ப் பார்வைதனில்
இருந்து அகற்ற முடியாமல்
துடிக்கின்றேன்.....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.