
காற்றடித்தால் கலைந்து போய்
பின் சேர்ந்து கொள்ளும் மேகம்
போன்றதல்ல எம் நட்பு..
ஒரு முறை போனால் திரும்பவும்
உடலோடு வந்து சேராத
உயிரைப் போன்றது
எம் நட்பு..
என் கோபத்தில் கூட துளிர்க்கிறது
உன் மேலான என் அன்பு
இரு கரங்கள் கொண்டு
பிண்ணிப் பிணைக்கப்பட்ட
இரு இதயங்களின்
வார்த்தைப் பரிமாறல்
எம் நட்பு...
உன் மனதினை நோகடிப்பவர்களை
நான் விரட்டுக்கின்றேன்
என் மனதில் இருந்து
என் உறவாய் இருந்தாலும்
இந்தக் கோபம் வேண்டாம்
என்கின்றாய் நீ அடிப் போடி
என் கோபமே உன் மேலான
அன்பின் நிமித்தம்
உருவானதல்லவா...
வயது பார்த்து வசதி பார்த்து
உருவம் பார்த்து வந்ததல்ல
எம் நட்பு - என்
கண்கள் உன் உருவத்தை
நேரில் கண்டதில்லை இதுவரை
என் இதயம் ஓவ்வொரு நிமிடமும்
தரிசித்துக் கொண்டிருக்கிறது உன்
அன்பான உருவத்தை
ஒவ்வொரு நொடிப்பொழுதும்...
No comments:
Post a Comment