இணையத்தில் சந்த்தித்தோம்
இதயத்தைப் பரிமாறினோம்
நான் இங்கே நீ அங்கே
எமக்கு பாலமாக நாம்
பரிமாறிக் கொண்ட
அன்புகள் மட்டுமே.....
நீ வருவாய் என
நான் காத்திருக்கின்றேன்
நான் வருவேன் என
நீ காத்திருக்கின்றாய்
காத்திருப்புக்களே எமது
வாழ்வா......??
காத்திருப்புக்கள் கூட
சுகமே உன்னை
நினைக்கையில்.....
உனக்காக நான் காத்திருக்கும்
இந்த நொடிப்பொழுதில் இருந்து
என் வாழ் நாள் வரை உள்ள
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
என் வாழ்வின் வசந்த காலம்......
No comments:
Post a Comment