Tuesday, October 23, 2007

காத்திருப்பு

இனியவள்

இணையத்தில் சந்த்தித்தோம்
இதயத்தைப் பரிமாறினோம்
நான் இங்கே நீ அங்கே
எமக்கு பாலமாக நாம்
பரிமாறிக் கொண்ட
அன்புகள் மட்டுமே.....

நீ வருவாய் என
நான் காத்திருக்கின்றேன்
நான் வருவேன் என
நீ காத்திருக்கின்றாய்
காத்திருப்புக்களே எமது
வாழ்வா......??

காத்திருப்புக்கள் கூட
சுகமே உன்னை
நினைக்கையில்.....

உனக்காக நான் காத்திருக்கும்
இந்த நொடிப்பொழுதில் இருந்து
என் வாழ் நாள் வரை உள்ள
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
என் வாழ்வின் வசந்த காலம்......

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.