உன்னோடு கனவில்
கழித்தேன் பல இரவுகள் - நீயே
கனவாகி போய் விடுவாய்
என அறியாமலே..!
பூக்களின் மொழிகள் அறிய
பூவோடு பூவாக கலக்கும்
தென்றல் போல் - உன்
இதயத்தின் மொழிகள் அறிய
உன் இதயத்தோடு
இதயமாக கலந்து விட்டேன்
இன்று நீயுமின்றி
இதயமுமின்றி அகதி போல்
அலைகின்றேன்
இந்த பாரினிலே..!
நிலைக்கும் என
நினைத்திட்ட வாழ்க்கை
மாயமாய் மறைந்திட
நிலக்காது என
நினைத்திருந்த நினைவுகள்
வேர் ஊன்றி குலைத்துக்
கொண்டிருக்கிறது
என் வாழ்வை..!
No comments:
Post a Comment