Tuesday, October 23, 2007

அகதி போல் அலைகின்றேன்..!!

இனியவள்


உன்னோடு கனவில் 
கழித்தேன் பல இரவுகள் - நீயே 
கனவாகி போய் விடுவாய் 
என அறியாமலே..!

பூக்களின் மொழிகள் அறிய 
பூவோடு பூவாக கலக்கும் 
தென்றல் போல் - உன் 
இதயத்தின் மொழிகள் அறிய 
உன் இதயத்தோடு 
இதயமாக கலந்து விட்டேன் 
இன்று நீயுமின்றி 
இதயமுமின்றி அகதி போல் 
அலைகின்றேன் 
இந்த பாரினிலே..!

நிலைக்கும் என 
நினைத்திட்ட வாழ்க்கை 
மாயமாய் மறைந்திட 
நிலக்காது என 
நினைத்திருந்த நினைவுகள் 
வேர் ஊன்றி குலைத்துக் 
கொண்டிருக்கிறது 
என் வாழ்வை..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.