Wednesday, October 24, 2007

!! வலி கொண்ட மெளனங்கள் !!



இரவின் மெளனத்தை 

கலைத்து விடுகிறது 

சலசலக்கும் 

தென்னங்கீற்று..!


ஆழ்கடலின் மெளனத்தை 

கலைத்து விடுகிறது 

ஆர்ப்பரிக்கும் 

அலைகள்...!


பூக்களின் மெளனத்தை 

கலைத்து விடுகிறது 

அவசரக் காற்று.!


எப்போதும் எங்கேனும் 

சில அழகிய 

மெளனங்கள் 

கலைக்கப்படுகின்றன 

அறியாத 

காரணங்களுடன்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.