Tuesday, October 23, 2007

என் ஆயுளின் எல்லை

இனியவள்


நினைக்கும் நேரங்கள்

இதயம் துடிக்கிறது

மறக்கும் நிமிடங்கள்

உயிர் வலிக்கிறது..!


இனிமையான பழைய

நினைவுகள் நெஞ்சை

பிழிகின்றன..,

உயிர் வாங்கும்

இன்றைய 

நிஜங்களால்..!


உன்னை விட்டு 

விலகிப் போகின்றேன்

தூர தேசத்து 

நாடோடியாய் - ஆனாலும்

விடாமல் துரத்துகின்றாய்

உன் நினைவுகளால்

கரையைத் தொட முனையும்

அலைகளாய்..!


என் வாழ்வின் 

கடைசி நிமிடங்களை 

சிந்திக்கின்றேன்

சிந்திக்காமல் - உன்னை

பிரிந்த காரணத்தை

உன்னிடம் என்

காதலை

சொல்லாமலேயே

நான் செய்த

தவறை..!


உன் நினைவின் 

எல்லை - என் 

ஆயுளைக் கடந்தது 

உன்னிடம் அன்று

சொல்லாத என் 

காதலை இன்றும்

சொல்லாமலேயே

முடியப் போகின்றது - என்

ஆயுளும்..!

1 comment:

Anonymous said...

my dear sweet friend..

enaku unkaloda vakitha rempa piditchu iruku ...

neenka eluthinathu kavitha illa...
athu niyam.

nilaluku niyam kodukirathu enpanka... athu ithu enu theriuthu..

wow very very very nice kavaithai my chellam...

i love you for ever***
~~~!!!***NILA***!!~~~

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.