நான் கீறிய
நீர்ச் சித்திரமல்ல
நீ..,
என் உயிருக்குள்
செதுக்கிய
உயிர்ச் சிற்பம்...!
விதி என்னைப்
பார்த்துச் சிரிக்க
வேதனைகள்
மனம் முழுவதும்
கோலம் போடுகின்றது..!
காத்திருக்கும் காலங்கள்
மெளனம் சாதிக்கின்றன - உன்
வரவுக்காக அல்ல - என்
ஏமாற்றத்தை எண்ணி..!
No comments:
Post a Comment