Tuesday, October 23, 2007

நீ

இனியவள்
நான் கீறிய 
நீர்ச் சித்திரமல்ல 
நீ.., 
என் உயிருக்குள் 
செதுக்கிய 
உயிர்ச் சிற்பம்...! 

விதி என்னைப் 
பார்த்துச் சிரிக்க
வேதனைகள் 
மனம் முழுவதும் 
கோலம் போடுகின்றது..! 

காத்திருக்கும் காலங்கள் 
மெளனம் சாதிக்கின்றன - உன்
வரவுக்காக அல்ல - என்
ஏமாற்றத்தை எண்ணி..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.