இனிமை தந்த
இரவு இன்று
வேதனையாக..,
கனவு தந்த
தூக்கம் இன்று
சந்தோசத்தையே
கலைக்கின்றது..!
உன் காட்சியே
கோலமாய் இருந்த
கண்கள் இன்று
கண்ணீர் கோலமாய்..,
தென்றலாய் இருந்த
என் மனம் - அன்று
உன் மனதில்
வேறொருவர் என
அறிந்த நாள்
முதலாய் -என்
மனம் ரணமானதே..!
உன் திசையை
நோக்கி பயணித்த
என் கால்கள்
மரணத்தை நோக்கி
செல்லாதா..,
எனக்குள்ளே
எழுந்த முதல்
காதலும் நீயே
முடிவில்லா காதலும்
நீயே..!
No comments:
Post a Comment