Wednesday, October 24, 2007

உன் பிரிவு

இனியவள்

இனிமை தந்த
இரவு இன்று 
வேதனையாக..,
கனவு தந்த 
தூக்கம் இன்று
சந்தோசத்தையே
கலைக்கின்றது..!

உன் காட்சியே 
கோலமாய் இருந்த 
கண்கள் இன்று
கண்ணீர் கோலமாய்..,
தென்றலாய் இருந்த
என் மனம் - அன்று 
உன் மனதில் 
வேறொருவர் என 
அறிந்த நாள் 
முதலாய் -என் 
மனம் ரணமானதே..!

உன் திசையை 
நோக்கி பயணித்த 
என் கால்கள்
மரணத்தை நோக்கி
செல்லாதா..,
எனக்குள்ளே
எழுந்த முதல்
காதலும் நீயே
முடிவில்லா காதலும்
நீயே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.