Wednesday, October 24, 2007

உன்னால்..!!

இனியவள்

எல்லா நம்பிக்கைகளும்

உடைத்தெறியப்பட்டு 

ஒவ்வொரு கணங்களும் 

மிகவும் கனமான 

ஏக்கத்துடன் 

தொடர்கிறது 

உன்னால்..!


உண்மையான சந்தோஷத்தை

தொலைத்து - போலியான 

சந்தோஷத்தை

முகத்தில் சுமந்து

அலைகிறேன் 

நாளும்

உன்னால்...!


சலனமில்லாத 

இராத்திரியில் தூக்கத்தை 

தொலைத்து - தினமும் 

தலையணை

நனைக்கிறேன்

உன்னால்..!


அன்பும் அரவணைப்பும்

உறவுகளிடம் 

செத்துப் போன - பின்பும் 

வாழ்கிறேன் எதனால்

உன்னால்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.