எல்லா நம்பிக்கைகளும்
உடைத்தெறியப்பட்டு
ஒவ்வொரு கணங்களும்
மிகவும் கனமான
ஏக்கத்துடன்
தொடர்கிறது
உன்னால்..!
உண்மையான சந்தோஷத்தை
தொலைத்து - போலியான
சந்தோஷத்தை
முகத்தில் சுமந்து
அலைகிறேன்
நாளும்
உன்னால்...!
சலனமில்லாத
இராத்திரியில் தூக்கத்தை
தொலைத்து - தினமும்
தலையணை
நனைக்கிறேன்
உன்னால்..!
அன்பும் அரவணைப்பும்
உறவுகளிடம்
செத்துப் போன - பின்பும்
வாழ்கிறேன் எதனால்
உன்னால்..!
No comments:
Post a Comment