Saturday, October 27, 2007

உன்னிடம்

இனியவள்

தேனிருக்கும் வரை
வண்டின் நாட்டம்
பூவிடம்...

இரவிருக்கும் வரை
நிலவின் இருப்பிடம்
வானிடம்...

தனிமையிருக்கும் வரை
வெறுமையின் இருப்பிடம்
மனதிடம்...

இன்பமிருக்கும் வரை
புன்னகையின் இருப்பிடம்
இதழிடம்...

துன்பமிருக்கும் வரை
வலிகளின் இருப்பிடம்
கண்களிடம்....

கற்பனையிருக்கும் வரை
கனவுகளின் இருப்பிடம்
தூக்கத்திடம்....

காதலிருக்கும் வரை
என் உயிரின் இருப்பிடம்
உன்னிடம்.....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.