என் குருதிக்குள்
அணுவாய்
கலந்திருப்பவனே
என் விழிகளை - நீ
ஆட்சி செய்வது அறியாமல்
உன்னை தேடித் தேடி
அலைகின்றேன்
சூரியனைத் தேடும்
தாமரையாய்..!
அன்னையின் அன்பில்
உலகை மறந்து
கிணற்றுத் தவளை போல்
வேற்றுலகைப் பாராமல்
அன்னையே உலகென
நினைத்திருந்தவளை
காதல் எனும்
பூங்காவனத்திற்கு
அழைத்து வந்த
தேவதூதன் நீ - என்றும்
ஜீவன் எனக்கு நீ..!
காற்றில் தவழ்ந்து
கடலில் மிதந்து
காதல் என்னும்
தேசம் தேடி
போகின்றேன்
உடலாய் இருக்கும்
உன்னிடம் - உயிராய்
வந்து கலந்திட..!
தியாகத்தின் திலகமாய்
திகழ்ந்த அன்னையின்
அன்பில் உலகை
மறந்திருந்த நான்
உன் மீதான
காதலினால்
அன்னையையே மறந்து
காதல் என்னும்
பூவில் அன்பென்னும்
தேன் அருந்துகின்றேன்..!
வானத்தின் உச்சியில்
மிதக்கின்றேன் - உன்னால்
சென்று விடாதே
எனை மறந்து
விழுந்திடுவேன்
சிறகொடிந்த
பறவையாய்..!
No comments:
Post a Comment