Wednesday, October 24, 2007

!! காதல் தேசம் !!

இனியவள்

என் குருதிக்குள் 
அணுவாய்
கலந்திருப்பவனே
என் விழிகளை - நீ
ஆட்சி செய்வது அறியாமல்
உன்னை தேடித் தேடி
அலைகின்றேன் 
சூரியனைத் தேடும் 
தாமரையாய்..!

அன்னையின் அன்பில்
உலகை மறந்து 
கிணற்றுத் தவளை போல் 
வேற்றுலகைப் பாராமல் 
அன்னையே உலகென
நினைத்திருந்தவளை 
காதல் எனும் 
பூங்காவனத்திற்கு
அழைத்து வந்த 
தேவதூதன் நீ - என்றும் 
ஜீவன் எனக்கு நீ..!

காற்றில் தவழ்ந்து 
கடலில் மிதந்து
காதல் என்னும் 
தேசம் தேடி
போகின்றேன்
உடலாய் இருக்கும் 
உன்னிடம் - உயிராய் 
வந்து கலந்திட..!

தியாகத்தின் திலகமாய் 
திகழ்ந்த அன்னையின் 
அன்பில் உலகை
மறந்திருந்த நான் 
உன் மீதான
காதலினால்
அன்னையையே மறந்து
காதல் என்னும் 
பூவில் அன்பென்னும் 
தேன் அருந்துகின்றேன்..!

வானத்தின் உச்சியில் 
மிதக்கின்றேன் - உன்னால்
சென்று விடாதே 
எனை மறந்து
விழுந்திடுவேன்
சிறகொடிந்த 
பறவையாய்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.