Wednesday, October 31, 2007

நிழலாடும் நிஜம்




மைகொண்டு புருவத்தைத்
தீட்டுவது போல் - உன்
விழிகொண்டு எனது இதயத்தைத்
தீட்டுகின்றாய்...

பூக்களின் வாசத்தை நுகர்ந்த
என் நாசி இன்று உன்
வியர்வையின் வாசத்தை
நுகர்கின்றது...

சாக்கடை நாற்றம் கூட
ரோஜா வாசத்தைத் தாங்கி
வருகின்றது உன்னோடு
நான் இருக்கையில்...

மாலைக் காற்று
காலைக் காற்றோடு
கைகோர்த்து வருகின்றது
உனக்கு துதிபாட...

தொலைக்காட்சியில் மூழ்கின்றேன்
காணும் பாடல் காட்சிகள்
அனைத்திலும் நீயும் நானும்....

கனவில் சுற்றுகின்றோம்
அகிலம் முழுதும்
நிழல் ஒர் நாளில்
நிஜமாகும் என்ற ஆசையில்
கனவு கலைந்து உன்னை
என்னுள் புதைக்கின்றேன்
நிஜத்தில்...

உன் குரல் கேட்டதில் இருந்து
என் குரல் கேட்க வில்லை
எனக்கு....

உன் உருவம் கண்டதில் இருந்து
வேறு உருவம் காட்டவில்லை
என் கண்கள் எனக்கு...

உன்னைத் தவிர மற்றவைகள்
அனைத்தும் குருடன் பார்வையில்
கலர்ப் படமாய் தோன்றுகிறது....

என் நிழலில் கூட - உன்
நிழல் நிழலாடுகின்றது...

என் நிஜத்தில் - உன்
நிஜம் நிந்திக்கின்றது...

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.