Tuesday, October 23, 2007

!! காதல் !!

இனியவள்

கண்ணிரிலே 
வாழ்கிறேன்
கனவாகிப் 
போனவனே
உன்னை 
நினைத்து..!

மரணத்தில் 
உன்னை மறக்கலாம் 
என நினைத்தேன்
என்னைக் கொல்ல 
எனக்கு
துணிவில்லை..!

தூக்கத்தில் உன்னை 
மறக்கலாம் - ஆனால்
கனவில் உன்னோடு
கைகோர்க்கும் 
ஞாபகமே - ஒரு
தனி இன்பம்..!

தோற்றாலும் விருப்பப்படும் 
இந்த தெய்வீக 
காதலை மறப்பது 
எப்படி - சிலுவைகளாய் 
உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
நான் உயிரோடு
இறந்து விட்டேன்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.