கண்ணிரிலே
வாழ்கிறேன்
கனவாகிப்
போனவனே
உன்னை
நினைத்து..!
மரணத்தில்
உன்னை மறக்கலாம்
என நினைத்தேன்
என்னைக் கொல்ல
எனக்கு
துணிவில்லை..!
தூக்கத்தில் உன்னை
மறக்கலாம் - ஆனால்
கனவில் உன்னோடு
கைகோர்க்கும்
ஞாபகமே - ஒரு
தனி இன்பம்..!
தோற்றாலும் விருப்பப்படும்
இந்த தெய்வீக
காதலை மறப்பது
எப்படி - சிலுவைகளாய்
உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
நான் உயிரோடு
இறந்து விட்டேன்..!
No comments:
Post a Comment