Wednesday, October 24, 2007

உன் புன்னகை !



உன் பூவிதழ் புன்னகை
கண்டு மலர்கின்றது
என் கண்கள் - சூரியனைக்
கண்ட தாமரையாய்..!

உன் புன்னகை
காணாமல் வாடிய
மலர்கள் கூட
துளிர்க்கின்றன - உன்
உதட்டோரத்தில் துளிர்விட்ட
புன்னகையை கண்டு..!

உன் புன்னகை கண்டு
பொறாமை கொண்ட
சந்திரன் மறைந்து
கொள்கின்றான் 
முகில்களின் இடைநடுவில்..!

என் கண்கள் கண்ட
அழகிய காட்சி உன்
புன்சிரிப்பு
என் உயிர் தொட்ட 
உயிர் உன் புன்னகை 
என்றும் இருக்கட்டும் 
உன்னோடு..!

மலரும் மலர்கள் 
அனைத்தும் - உன் 
புன்னகை கண்டு 
மலரட்டும்
மேகங்கள் மழையாய் மாறி
விரைகின்றன - உன் 
புன்னகையை
தரிசித்திட..!

அழகிய இயற்கைக் 
காட்சியாய் - உன் 
புன்னகை கண்டு
பறந்தோடுகின்றது - என்
சோகங்கள் அனைத்தும்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.