
கண்கள் கண்டு இதயம் தீண்டும்
காதலைக் காட்டிலும்
இதயம் கண்டு கண்ணைத்
தீண்டும் நட்பு கடவுளை விடச்
சிறந்தது..
என் மனதின் மெளனம் நீயறிவாய்
உன் மனதின் மொழிகள்
நானறிவேன்..
எங்கள் இதயங்கள் பேசிக்கொள்கின்றன
வார்த்தைகள் மெளனிக்கும்
போது...
என் சோகங்களை நீ உள்வாங்கி
சந்தோஷங்களை பரிசளித்தாய்..
உன் வாழ்வின் இனிமைகள்
என் வாழ்வின் இனிமைகள்...
தென்றல் தழுவும் மலராய்
உன்னை இன்பங்கள்
தழுவட்டும்...
தோழியே என் ஓவ்வோர்
அசைவிலும் உன் விம்பம்....
என் ஆயுளின் கடைசிவரை
எமக்குள் இருக்கும் இந்த
உயிர்ப் பந்தம்.....
உன் கண்களில் கலக்கம் - என்
உயிரினில் நடுக்கம்...
பிரிவென்ற சொல்லை விடுத்து
உயிர் என்ற சொல்லோடு
பிண்ணிப் பிணைவோம்......
No comments:
Post a Comment