Tuesday, October 30, 2007

இறுதிவரை இணைவோம்

இனியவள்

கண்கள் கண்டு இதயம் தீண்டும்
காதலைக் காட்டிலும்
இதயம் கண்டு கண்ணைத்
தீண்டும் நட்பு கடவுளை விடச்
சிறந்தது..

என் மனதின் மெளனம் நீயறிவாய்
உன் மனதின் மொழிகள்
நானறிவேன்..

எங்கள் இதயங்கள் பேசிக்கொள்கின்றன
வார்த்தைகள் மெளனிக்கும்
போது...

என் சோகங்களை நீ உள்வாங்கி
சந்தோஷங்களை பரிசளித்தாய்..

உன் வாழ்வின் இனிமைகள்
என் வாழ்வின் இனிமைகள்...

தென்றல் தழுவும் மலராய்
உன்னை இன்பங்கள்
தழுவட்டும்...

தோழியே என் ஓவ்வோர்
அசைவிலும் உன் விம்பம்....

என் ஆயுளின் கடைசிவரை
எமக்குள் இருக்கும் இந்த
உயிர்ப் பந்தம்.....

உன் கண்களில் கலக்கம் - என்
உயிரினில் நடுக்கம்...

பிரிவென்ற சொல்லை விடுத்து
உயிர் என்ற சொல்லோடு
பிண்ணிப் பிணைவோம்......

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.