Wednesday, October 24, 2007

உன்னால் என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்..!

இனியவள்

கடல் நீராய்
இருந்த என்னை
மழை நீராய்
மாற்றினாய்..!

நனவாய் இருந்த
என் ஆசைகளை
கனவாய் 
மாற்றினாய்..!

நானாய் இருந்த
என்னை நீயாய்
மாற்றினாய்..!

சோக கீதமாய் 
இருந்த -என் 
நினைவுகளை
இனிய கீதமாய்
மாற்றினாய்..!

புயலாய் இருந்த
என் வாழ்வை
தென்றலாய் 
மாற்றினாய்..!

காதல் என்ற 
நீருற்றை என்னுள் 
ஊற்றி பசுமையை 
என்னுள் விதைத்து
விட்டாய்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.