காதல் அத்தனை
சோகத்தையும்
சோகத்தையும்
துடைக்கும் ஒற்றைக்
கைக்குட்டை..!
காதல் அத்தனை
கைக்குட்டைகளையும்
நனைக்கும்
ஒற்றைச் சோகம்..!
உனது சிரிப்பை
மொழி பெயர்க்கும்
கலை வாய்த்திருந்தால்
ஆயிரம் கவிதைத்
தொகுதிகள்
போட்டிருப்பேன்..!
விழித்துவிட கூடாதே
எனும் நினைப்பில்
தூங்கப் போகிறேன்
தூங்கவே விடாமல்
விழிக்கின்றன
உன் நினைவுகள்..!
பிரசுரத்துக்கு அனுப்பாத
முத்தம் ஒன்று
என்னிடம் காத்திருக்கிறது
உன் இதழ்களில்
பிரசுரிக்கும் ஆசையுடன்..!
அதிகாலைக்
கதிரவனும்..
கை நீட்டும்
கடலலையும்..
மனம் நனைக்கும்
மழைச்சாரலும்..
கவிதை வான்
வெளியும் - இவை
எதையும் விட
அழகானவன்
நீயென்று தோன்றிய
தருணத்தில் - நான்
உனைக் காதலிக்கத்
துவங்கியிருக்கலாம்..!
1 comment:
hello u seems next vairamuthu( paarthupa vairamuthu , vaali elam kanama poyda poranga unnale)
Post a Comment