Saturday, November 3, 2007

வலிகளின் கரங்களில்

இனியவள்

கண் மூடி கனவுலகத்தில்
வாழ்ந்தேன் உன்னோடு
கண் திறக்க மறுத்தேன்
கனவு கானலாய் போய்
விடுமென்ற அச்சத்தில்..!

கண் மூடி இருட்டில்
வாழ்ந்ததால் என்னவோ
காணாமலே
போய் விட்டான் என்
வாழ்க்கையிலிருந்தே..!

வலிகளின் கரங்களில்
சிறை பிடிக்கப்பட்ட
பறவை இவள்..,
மெழுகாய் கரைகிறது
என் உயிரும்
அணைந்திடும் நாளை 
எதிர் பார்த்து..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.