கண் மூடி கனவுலகத்தில்
வாழ்ந்தேன் உன்னோடு
கண் திறக்க மறுத்தேன்
கனவு கானலாய் போய்
விடுமென்ற அச்சத்தில்..!
கண் மூடி இருட்டில்
வாழ்ந்ததால் என்னவோ
காணாமலே
போய் விட்டான் என்
வாழ்க்கையிலிருந்தே..!
வலிகளின் கரங்களில்
சிறை பிடிக்கப்பட்ட
பறவை இவள்..,
மெழுகாய் கரைகிறது
என் உயிரும்
அணைந்திடும் நாளை
எதிர் பார்த்து..!
No comments:
Post a Comment