பாடம் படிப்பதை
மறந்து -உன் விழியினைப்
படிக்கின்றேன் என்
விழி கொண்டு..!
உன் மூச்சுக் காற்றுப்பட்டு
நாளை மலரவிருந்த
மொட்டுக்கள் எல்லாம்
இன்று மலர்கின்றனவே..!
ஏதோ நடக்கின்றது
எனக்குள் - இதயம்
புரிந்து கொண்டது
காதல் அதிரடியாய்
நுழைந்து கொண்டது..!
நட்சத்திரங்கள் பூவாய் பூமாறிப்
விழாக்கோலம் பூணுகின்றதே
நான்போகும் பாதைகள்
அனைத்திலும்..!
விழும் மழைத்துளிகள்
அனைத்தும் என்னைத்
தீண்டாமல் விழுகின்றதே
நிலத்தில்..!
குடை பிடிக்கின்றது
வெண்ணிலா வானத்திலிருந்து
இறங்கி வந்து..!
காதல் மேல்
காதல் கொண்டதால்
உன்மேல் காதல்
கொண்டேனா..!
உன் மேல் காதல்
கொண்டதால்
காதல் மேல்
காதல் கொண்டேனா..!
No comments:
Post a Comment